Tuesday 13 August 2013

ஆரம்பம் -முதல் பதிவு


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.
                 -திருவள்ளுவர் 

இது ஒரு வலைப்பதிவின்

ஆரம்பம் :


இங்கு எழுதப்படும் எழுத்துக்கள் என்னுடையதாக இருக்கலாம் ஆனால் இதற்கான உந்துதல் (அதாவது inspired) என்னுடைய நண்பர்களின் வலைப்பதிவு தான். தான் நினைத்த விரும்பிய நட்சத்திரங்களை எழுத்து வடிவில் செதுக்கி ரத்தினத்தில் பதித்த முத்து போல் உருவாக்குவது இதை போன்ற சாதாரண  வலைப்பதிவு தான். தன்னால் தீட்டப்படும் எழுத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது எழும் உற்சாகதிற்கான அளவை சொல்வதிற்கில்லை. முன்னொரு காலத்தில் தனியொருவரின்  கருத்தை பதிவை  செய்ய நம்மூர்களில் கட்டுரை போட்டி, பேச்சு  போட்டி என்றெல்லாம் நடத்துவார்கள் அந்த  காலமெல்லாம் இப்போது FB status இலும் Twitter tweet இலும் தான் மிஞ்சி உள்ளது . 
                                                      
இந்த வலைபதிவு என்னால் எனக்கு நானே உருவாக்கி கொண்டது. நம் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை  நமக்கான கருத்து  தளமாக எடுத்து செயல்பட இந்த வலைபதிவு இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை . கருத்து என்று மட்டும் நில்லாமல் தனக்கான நகைச்சுவை திறன், கதை எழுதும் திறன் ஆகியவற்றை வெளிபடுத்தும் அற்புத இடம் வலைபதிவை தவிர வேறொன்றும் இல்லை. நம் மக்கள் ரசிக்கின்ற Cricket Cinema  அரசியலை பற்றியே கருத்துக்களும் வணங்குதல்களும் இருந்தாலும் அதை பற்றி நாம் பதிவிடும் கருத்து நம்மை மனதளவில் இன்னும் தூண்டுகிறது.  இந்த வலைபதிவு ஒரு தகவல் தொகுப்பாக எதிர்காலத்தில் திகழ்ந்தால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. உடல் நல ஆரோக்கிய குறிப்புகளுக்கும் , ஊக்கமூட்டும் கதைகளுக்கும் இந்த வலைபதிவில் தனி இடமுண்டு. எதிர்காலத்தில் இந்த வலைபதிவுக்கு எத்தனை Followers இருந்தாலும் .  இந்த வலைபதிவு உருவாக  காரணம் இன்னொரு வலைபதிவு தான். 




இன்று முதல் இது ஆரம்பம் உங்கள் நல்லாசியுடன் !

6 comments:

  1. இந்த வலை பதிவு ஒரு அறிவு களஞ்சியமாக மாற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தம்பி..

      Delete
  2. உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அருமை தம்பி - ஜெரால்ட்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசிர்வாதங்களுடன் அடுத்தடுத்த பதிப்புகளில் சந்திக்கிறேன்...

      Delete
  3. இமயம் தாண்டி உன் எழுதும், புகழும் வாழ்க !

    ReplyDelete